மத்தியப்பிரதேசத்தில் பாலியல் புகார் அளித்த பெண்ணை குற்றவாளி 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவக்குமார் கைதானார். கடந்த 10 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், வீட்டுக்குள் புகுந்த அங்கு தனியாக இருந்த பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் சிவக்குமாரை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து உயரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் 30 இடங்களில் கத்தி குத்து காயம் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.